வாகனப் போக்குவரத்து நிறைந்த வீதி ஒன்றில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் அதனை நிறுத்த முற்படும்போது நிலை தடுமாறி தரையில் விழுந்துள்ளார்.
இதன்போது வழிப்போக்கர் ஒருவர் கைகொடுக்க எழுந்த நின்ற அப்பெண் பதட்ட மிகுதியால் மீண்டும் மோட்டார் சைக்கிளின் வேகமுடுக்கியை முறுக்க வண்டி அவரையும் தாங்கிக் கொண்டு வீதியை விட்டு விலகி மின்னல் வேகத்தில் சென்றுள்ளது.
சி.சி.டி.வி கமெராவில் பதிவான இக்காட்சி தற்போது இணையத்தளங்களில் பரவிவருகின்றது. ஆனால் அதன் பின்னரான குறித்த பெண்ணின் நிலை தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை
No comments :
Post a Comment