பிளஸ் 2 முதலிடம் பிடித்த மாணவர்களின் மதிப்பெண் விபரம்!
மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10:30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஊத்தங்கரையைச் சேர்ந்த ஆர்த்தி மற்றும் ஜஸ்வந்த் ஆகியோர் 1200 மதிப்பெண்களுக்கு 1,195 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.
தமிழ் பாடத்தை முதன்மை பாடமாக எடுத்து படித்த ஆர்த்தி, ஜஸ்வந்த் என்ற மாணவர்கள் 1195 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளார். இவர்கள் இருவரும் கிருஷ்ணகிரியை சேர்ந்த ஊத்தங்கரை வித்யா மந்திர் பள்ளியில் படித்தவர்கள்.
ஆர்த்தியின் மதிப்பெண் விபரம்:
தமிழ் : 199
ஆங்கிலம் : 197
கணிதம் : 200
இயற்பியல் : 199
வேதியியல் : 200
உயிரியல் : 200
ஜஸ்வந்திம் மதிப்பெண் பட்டியல்:
தமிழ் : 199
ஆங்கிலம் : 197
கணிதம் : 199
இயற்பியல் : 200
வேதியியல் : 200
உயிரியல் : 200
திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் மெட்ரிக் பள்ளியில் படித்த பவித்ரா, 1194 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். நாமக்கல் எஸ்.கே.வி. பள்ளியை சேர்ந்த வேணு பிரீத்தா என்ற மாணவி 1193 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3ம் இடம் பிடித்துள்ளார்.
காஞ்சிபுரம் அரசு மேல்நிலைபள்ளியில் படித்த சரண்யா 1179 மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளியில் படித்தவர்களில் முதலிடம் பிடித்துள்ளார்.
ஓட்டுமொத்தமாக ஈரோடு மாவட்டம் 94.86% தேர்ச்சியுடன் மாநில அளவில் முதலிடத்தில் உள்ளது. பெரம்பலூர் 96.73% தேர்ச்சியுடன் இரண்டாம் இடமும், விருதுநகர் 95.73% தேர்ச்சியுடன் மூன்றாம் இடமும், 95.70% தேர்ச்சியுடன் கன்னியாகுமரி மாவட்டம் நான்காம் இடமும், 95.47% தேர்ச்சியுடன் தூத்துக்குடி மாவட்டம் ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளது.
Labels:
News
,
other
No comments :
Post a Comment