நடுவிரல் சைகையை தவிர்த்த அஜித்
தானொரு நாகரிக கனவான் என்பதை நேற்று நடந்த தேர்தலின் போது நிரூபித்தார் நடிகர் அஜித்.
காலையில் மனைவியுடன் வாக்களிக்க வந்த அஜித், வாக்களித்த பின் எல்லோரையும் போல் மையிட்ட விரலை மட்டும் உயர்த்தி காட்டாமல் மொத்த விரல்களையும் உயர்த்தி காட்டினார். பலருக்கும் அது வித்தியாசமாக தெரிந்திருக்கும். ஆனால், அஜித்தின் செய்கை அர்த்தமுள்ளது, நாகரிமானது.
காரணம்...?
அனைவருக்கும் இடது ஆள்காட்டி விரலில்தான் மை வைத்தனர். ஆனால் அஜித்துக்கு மை வைத்தது இடது நடுவிரலில். நடுவிரலை மட்டும் உயர்த்தி காட்டுவது மோசமான சைகை. அதற்கு வேறு அர்த்தம் உள்ளது.
அதனை தவிர்ப்பதற்காகவே அனைத்து விரல்களையும் சேர்த்து காட்டினார் அஜித்.
இதற்கு முன்பு நடந்த தேர்தல்களில் பலரும் மை வைக்கப்பட்ட நடுவிரலை உயர்த்தி காட்டியது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்த சின்ன விஷயத்திலும் சென்சிபிளாக நடந்து கொண்டார் அஜித்.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment