ஜெயலலிதாவை பார்த்து உட்காருன்னு சொன்ன ஆம்பளை கேப்டன்தான் : பிரேமலதா அதிரடி
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பார்த்து, உட்கார் என்று கூறிய ஒரே ஆம்பளை கேப்டன் விஜயகாந்துதான் என்று பிரேமலதா பேசியுள்ளார்.
தேமுதிக சார்பில் மதுரையில் நடைபெற்ற தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டத்தில் தேமுதிக மகளிர் அணி தலைவி விஜயகாந்த் பிரேமலதா கலந்து கொண்டு பேசினார். அவர் கூறும்போது “தேமுதிக தலைவர் விஜயகாந்த் பற்றி பத்திரிக்கைகளும், ஊடகங்களும் அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை வெளியிட்டு வருகின்றன.
தேமுதிக மக்கள் நலக்கூட்டணியில் இணைந்ததுதான் தமிழக மக்கள் தற்போதைய பேச்சாக உள்ளது. இந்த கூட்டணியில் பிளவு ஏற்படும் என்று திமுக தரப்பும், பத்திரிக்கைகளும் எதிர்பார்க்கிறது. ஆனால் அப்படி நடக்க வாய்ப்பில்லை. கேப்டன் ஒரு முடிவு எடுத்துவிட்டால், அதில் உறுதியாக இருப்பார்.
முதலமைச்சர் ஆகும் தகுதி கேப்டனுக்கு இல்லையென்றால், இங்கு யாருக்கு அந்த தகுதி இருக்கிறது?. அவர் தில்லான முடிவுகளை எப்போதும் எடுப்பார். தமிழ்நாட்டில் ஜெயலலிதாவைப் பார்த்து உட்காருன்னு சொன்ன ஒரே ஆம்பளை கேப்டன்தான்’ என்று ஆவேசமாக பேசினார்.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment