திமுக - தேமுதிக கூட்டணியை தடுத்த ஜெயலலிதா
தமிழகத்தில் திமுக - தேமுதிக கூட்டணியை அதிமுக வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் ஒரு வலுமான அணியும் அமைக்கும் பணிகள் வேகம் எடுத்தன.
இந்த நிலையில், வைகோ தலைமையில் மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்றவைகள் இணைந்து மக்கள் நலக்கூட்டணியை உருவாக்கியது.
இந்த தேர்தலில் தேமுதிக தனித்துப்போட்டி என அறிவித்த நிலையில், அக்கட்சி திமுக கூட்டணிக்கு செல்லக்கூடும் என்ற தகவல் வெளியானது. அவ்வாறு தேமுதிக திமுக கூட்டணிக்கு சென்றால் ஒரு தொகுதிக்கு குறைந்த பட்சம் சுமார் 10, 000 வாக்குகள் திமுக கூட்டணி பக்கம் செல்லக்கூடும். இதனால் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் எளிதில் வெள்ள வாய்ப்பு அமைந்துவிடும்.
இதனால், எப்பாடுபட்டாவது திமுக - தேமுதிக கூட்டணி அமையக் கூடாது என அதிமுக தலைமை எதிர்பார்த்தது. மேலும், இதற்காக அதிமுக தலைமை திரைமறைவு வேலைகளில் இறங்கியது. உளவுப்பிரிவு போலீசாரும் தங்களது அரசியல் பணியை மிகவும் சிறப்பாக செய்தனர். இதனால், பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த திமுக - தேமுதிக கூட்டணி புஸ்ஸானது.
விஜயகாந்த் பார்வை மக்கள்நலக்கூட்டணி பக்கம் திரும்பியது. மேலும், விஜயகாந்த் தலைமையில் அக்கூட்டணி செயல்பட உள்ளது. இதனால், அதிமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறும் என்பதால், அதிமுக வெற்றி எளிதில் வெற்றி முகம் காண வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக முதல்வர் ஜெயலலிதா மிகவும் மகிழ்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment